13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி – தந்தை உட்பட பலர் சிக்கினர்
நாவலப்பிட்டியவில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சம்பம் தொடர்பில் மேலும் ஆறு பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed