13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி – தந்தை உட்பட பலர் சிக்கினர்

நாவலப்பிட்டியவில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சம்பம் தொடர்பில் மேலும் ஆறு பேர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.